உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.49 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் பதிவாகி கொண்டு வருகிறது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அடுத்து 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 73 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 65 கோடியே 77 லட்சத்து 12 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 68 லட்சத்து 37 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.