கிராம சபை கூட்டம் நடக்கும் என்று அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை: குடியரசு தினமான வரும் 26ல் கிராம சபை கூட்டம் நடக்குமா என்று எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தினங்களில் தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 26 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம சபையில் தீர்மானங்களை இயற்றப்பட்டு அந்த தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.