அரசு அதிகாரிகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்... புதுச்சேரி முதல்வர் வேதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. புதுவையின் ஒவ்வொரு அசைவும் மத்திய ஆட்சியாளர்களின் தயவில் உள்ளதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.