சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் கடிதம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது நியாயமற்றது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தெரியாமல் தமிழக அரசு குழு அமைத்து விட்டதாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ள கவர்னர், கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை உடனே நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் எழுதிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவான கடிதத்துக்கு தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் கடிதம் அனுப்பப்படவில்லை.