மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 119 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 8 ஆயிரத்து 343 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 119 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 96.64 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 97.13 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.