உதகையில் பெய்த கனமழை... கால்வாய் அடைப்பால் வீடுகளை சூழ்ந்த நீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

உதகை, பட்பயர், சிறுமலை நகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், அப்பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மழை நீரால் சூழப்பட்டது.

வடிநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்களே அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வெகுவாக அவதிக்குள்ளாகினர்.