கியூபாவில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கியூபா: ஆறுகளில் வெள்ளம்... கியூபா நாட்டில் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் பல கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அங்குள்ள Jiguani நகரத்தை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.