தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ... தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தை பொறுத்தவரை தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும்

மேலும் கோயம்புத்தூர், ஈரோடு தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போன்று வருகிற மே – 9 ,10 ஆகிய தேதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.