தொடர் விடுமுறை.. சென்னை பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தொடர் விடுமுறையை ஓட்டி தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கார், வேன், பேருந்துகளில் அதிக அளவு பெருங்களத்தூர் வழியாக செல்வதாலும், ஏராளமான பயணிகள் அங்கு நின்று செல்லும் பேருந்துகளில் பயணிகள் அதிக அளவு ஏறி செல்வதாலும் பெருங்களத்தூரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வண்டலூரை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அதிக அளவு வழியை போக்குவரத்து காவல் துறையினர் சீர்படுத்தியிருந்தாலும் அதிக வாகனங்கள் கடந்து செல்வதால் நெரிசல் காணப்படுகிறது.

இதற்கு இடையே மேம்பால பணிகள் நடைபெருவதால் அங்கு நிழற்குடைகள் அகற்றப்பட்டு உள்ளது. தற்போது தூரல் மழை பெய்துவருவதால் பயணிகள் மேம்பாலம் பணி நடைபெறும் இடங்களில் நிற்கவேண்டிய சூழல் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

அதுபோன்று சென்னையை நோக்கி வாகனங்களும் நெரிசலில் சிக்கி உள்ளது. பெருகளத்தூரில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக வண்டலூர் வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து உள்ளன.