செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

சென்னை: உடல்நிலை சீராக உள்ளது... அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதயத்தில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்ட நிலையில் அவர் ஐசியுவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.