அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்ற முதல்நபர் நான்தான்

கலிபோர்னியா: எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை. அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்றதும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார்.

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை.

அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் என்றும் கூறியுள்ளார். குஜராத் நீதிமன்றத்தில் நடந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட நிலையில்தான் ராகுல்காந்தியின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.