தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்... கர்நாடகா துணை முதல்வர் தகவல்

கர்நாடகா: இரு மாநிலங்களும் பயனடையும்... மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், அத்திட்டத்தால், காவேரி படுகையில் விவசாயிகள் பாசனமும், பொதுமக்கள் குடிநீரும் பெறுவர் என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.