நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... கெத்தாக சொன்ன ராகுல்காந்தி

வயநாடு: பிரதமர், பா.ஜனதா., ஆர்.எஸ்.எஸ்., போலீசாருக்கு பலர் பயப்படலாம். ஆனால் நான் சிறிதும் பயப்பட மாட்டேன் என்று கெத்தாக சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடு சென்றார். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர், பா.ஜனதா., ஆர்.எஸ்.எஸ்., போலீசாருக்கு பலர் பயப்படலாம். ஆனால் நான் சிறிதும் பயப்பட மாட்டேன். அதுதான் அவர்களின் பிரச்சனை. ஏனென்றால் நான் உண்மையில் விசுவாசி.

எத்தனை முறை அடித்தாலும், எத்தனை முறை என் வீட்டுக்கு போலீஸ் அனுப்பினாலும், என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் எனக்கு பயம் இல்லை. என்னை மிரட்ட முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பேன் என்று கூறினார்.