நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்... சீமான் சொல்கிறார்

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இன்னும் பலமாக இருக்கும். நாங்கள் ஒரு பேரியக்கமாக இருப்பதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டியதில்லை. அவர் தான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி தலைவர் சிவந்தி ஆதித்தனின் 10வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பாய்ஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் விஜய் அரசியலுக்கு முயற்சிக்கிறார். அதை நான் வரவேற்கிறேன்.

விஜய் வந்தால் இன்னும் பலமாக இருக்கும். நாங்கள் ஒரு பேரியக்கமாக இருப்பதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டியதில்லை. அவர் தான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் மற்றும் கல்வியை வழங்குவதே எங்களது கனவு. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வேண்டும் என்று வாதிடும் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? நாங்கள் விரும்புவது மக்கள் மாற்றமோ ஆட்சி மாற்றமோ அல்ல. ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.