புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் பெறலாம்.. அரசு முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்கள் ரேஷன் பொருள் வாங்க ரேஷன் கார்டு தேவை படுகிறது.
அனால் புதிய ரேஷன் கார்டை தருவதற்கு அதிகாரிகள் கால தாமதம் செய்கின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

இபோது புதிதாக பயோ மெட்ரிக் முறையில் உணவு பொருள்கள் அனைத்தும் ரேஷன் கார்ட்தாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு ரேஷன் பொருள்கள் வழங்கபடுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறை கேடுகள் ஏற்படுவது குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து ரேஷன் கார்டுக்கு தற்போது அதிக பேர் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் அதிக பேர் விண்ணப்பித்து காத்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களால் மானிய பொருள்கள் வாங்க முடியவில்லை.
இதனால் இந்த முடிவை எடுத்து இருகின்றனர். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு அஞ்சல் மூலமாக வீடுகளுக்கே அனுப்படும் என்று அறிவித்து உள்ளது தமிழக அரசு.