மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 501 பேர் பலி

மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 501 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மெக்சிகோவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 501 பேர் வரை நோய் தொற்றால் பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோவில் இவ்வாறு பலியாவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கையை ஒப்பிடுகையில் நேற்று முன்தினம் (மே.,26) சற்று அதிகரித்தது. அன்று ஒரு நாளில் நாட்டில் 3,455 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

நேற்றைய நிலவரப்படி, மெக்சிகோவில் கொரோனா பாதிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8,134 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.