இந்தியா: உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாகவே குறைந்து கொண்டே வருகிறது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மடடும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,230 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,358 ஆக பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,255 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,562 பேர் ஆக உள்ளது.
இதனை அடுத்து நேற்று ஒரேநாளில் 32 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,04,553 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மட்டும் 2,17,82,43,967 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 14,08,253 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.