விழுப்புரத்தில் அரசு மருத்துவர் உள்பட மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,766 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 92,206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,766 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஒரு அரசு மருத்துவர் உள்பட மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,887 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 31 பேர் பலியாகியுள்ளனர்.