கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: குளிப்பதற்கு தடை விதிப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இதில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கும், அருவிக்கு செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், அருவிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு 4வது நாளாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.