டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி உள்ளது என பாராட்டு

வாஷிங்டன் : டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் அன்னே-மேரி குல்டே-வூல்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட புதுமைகளை அதிகரித்துள்ளது. சில நிர்வாகத் தடைகளைத் தாண்டியது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க டிஜிட்டல் மயமாக்கல் ஒரு சிறந்த வழியாகும்.

டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் இருந்த நிறுவனங்கள் உண்மையில் சிறப்பாகச் செயல்பட்டன. சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் எவ்வாறு உதவுகிறது. என்பதை இது ஆராய்கிறது.

சர்வதேச நாணய நிதியம் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை அதிகளவில் வழங்கி வருகிறது. சர்வதேச நாணய நிதியமும் இந்த விஷயத்தில் இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போது, பொதுமக்களுக்கு உதவிகள் மற்றும் சேவைகளை விநியோகிக்கவும் இது பயனுள்ளதாக இருந்தது, என்றார்.