சூடானில் 148 இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை விமானம்

சூடான்: 148 இந்தியர்கள் மீட்பு... சூடானில் இருந்து 148 இந்தியர்களை மீட்டு இந்திய விமானப்படையின் சி 130 ஜே விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை வந்தடைந்தது.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் ஆபரேசன் காவேரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர்.

முதலில் 278 பேருடன் இந்திய கடற்படை கப்பல் சுமேதா, சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு. ஜெட்டா சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து 2வது தொகுதியாக 148 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு ஜெட்டா அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு விமானம் மூலம் 135 பேர் ஜெட்டா அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.