பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர்: பென்சன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன்படி அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகிக்க அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் வழங்கியது போல பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்.

பென்சன் ரூபாய் 3000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.