மீண்டும் ஒற்றுமை பயணத்தை ஆரம்பிக்கிறாரா ராகுல்காந்தி?

புதுடெல்லி: மீண்டும் ஒற்றுமை பயணம்... குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் வரை 2வது கட்ட இந்திய ஒற்றுமை சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2வது கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை முதல் கட்ட ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி ஏற்கனவே தொடங்கியுள்ளார்.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் வரை ராகுல் காந்தியின் 2வது கட்ட ஒற்றுமைப் பயணம் காங்கிரஸ் தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.