காசா எல்லையருகே தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல்: காசா எல்லையருகே தரைவழித்தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தரைவழித்தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் காஸா எல்லை அருகே இஸ்ரேல் ராணுவம் படை வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகிறது.

எல்லையோர நகரான ஸ்டெராட்டில், டிரோன் தாக்குதலால் சேதமடையாத மெர்காவா ரக பீரங்கிகள் அணிவகுத்து நிற்கின்றன.

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளதால், ரோந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போர் பதற்றத்தால் வாகன நெரிசல் மிகுந்த ஸ்டெராட் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.