இலங்கைக்கான அமெரிக்க தூதரை மீள அழைக்கவில்லை என தகவல்

இலங்கை: அதெல்லாம் வதந்தி... இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாஷிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய டிசம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதுகுறித்து ஆராய்ந்தபோது அது வதந்தி என்று தெரியவந்துள்ளது. அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், ஜூலி சங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ஜோ பைடனால் 2022இல் ஜூலி சங் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.