குண்டு தாக்காத குடில்களை அதிகம் வாங்கும் ஜப்பான் மக்கள்

ஜப்பான்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்துவதன் எதிரொலியால் ஜப்பானில் 'குண்டுதாக்கா குடில்'களின் விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக இவற்றை வாங்குவது அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

ஜப்பான் வான்பரப்பு வழியாக கடந்த அக்டோபர் மாதம், வட கொரிய ஏவுகணை சீறிப்பாய்ந்ததன் எதிரொலியாக ஜப்பானில் குண்டுதாக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள குடில்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

வீட்டின் ஒரு பகுதியில் அமைக்கக்கூடிய, அறை வடிவிலான இந்த குடில் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. விஷ வாயு மற்றும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த குடிலால் நேரடி ஏவுகணை தாக்குதலை மட்டும் எதிர்கொள்ள இயலாது.

3 டன் எடையிலான இந்த குண்டுதாக்கா குடில் சுமார் 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஜப்பானில் இதை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.