இந்தியாவில் கடந்த 24 மணிநேர புதிய பாதிப்பு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.08 கோடியாக அதிகரித்துள்ளது

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3076 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மற்றும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது.

மேலும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44,15,48,42 ஆக பதிவாகியுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 220,64,31,651 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,928 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.