கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

கேரளா: சோதனை ஓட்டம் வெற்றிகரம்... கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை வரும் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கிறார்.

முன்னதாக இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில், எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைந்தது.