கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வருவோம்

கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்... மக்கள் அதீத நம்பிக்கையால் கவலையீனமாக இருந்தமையால் தற்போது கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை வந்துவிட்டது. இதனையும் விரைவில் நாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் எனக் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டக் கடற்தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்.நகரிலுள்ள ஈபிடிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

திடீரென இலங்கையில் ஏற்பட்ட கொரோனாவின் முதல் அலையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டோம்

தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலைகளை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.