வடகொரியாவில் 2 மாத குழந்தைக்கும் ஆயுள் தண்டனை

வடகொரியா: 2 மாத குழந்தைக்கும் ஆயுள்தண்டனை அளித்துள்ளது வடகொரியா என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவில், பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டுமாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.