தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க முடிவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட மறுநாளிலே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது பல்வேறு வழிகாட்டுதல்களோடு டாஸ்மாக் கடைகள் கடந்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நேரம் இதற்கு முன்பு காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி வரை மதுவிற்பனையாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.