நாளை மதுக்கடைகள் மூடல்... சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: சென்னையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மது விற்பனை செய்யக்கூடாது.

சில்லறை விற்பனை கடைகள் மற்றும் தொடர்புடைய பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகளுக்கு சொந்தமான பார்கள், உரிமம் பெற்ற ஓட்டல்களுக்கு சொந்தமான பார்கள் என அனைத்தும் சுதந்திர தினத்தன்று (நாளை) மது விற்பனை செய்யக்கூடாது.

அவ்வாறு செய்யத் தவறினால் மது விற்பனை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.