நாடாளுமன்ற புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தன தேர்வு

புதிய சபாநாயகர்... நாடாளுமன்ற புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவையும், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவையும் தெரிவு செய்வது என ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதனை நியமிப்பது எனவும் ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அப்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே நாடாளுமன்றத்தின் அவை தலைவராக தினேஷ் குணவர்தனவும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் தெரிவு செய்ய ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.