சோனியா காந்தி உடல்நிலைக் குறித்து கவலையாக இருப்பதாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இன்று சோனியாகாந்தி டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சோனியா அவர்களே என பதிவிட்டுள்ளார்