கல்லூரி விடுதியில் சகமாணவர் மீது கடுமையாக தாக்கியவர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் கல்லூரி விடுதியில் சக மாணவனை கடுமையாக தாக்கிய விவகாரத்தில் இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு கோதாவரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், விடுதியில் ஒரு மாணவரை கம்பு, கட்டை, இரும்பு ராடு, ஆகியவற்றால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தும் தாக்கிய வீடியோ வெளியானது.

அதன் அடிப்படையில் 4 மாணவர்களையும் கைது செய்த போலீசார், மாணவனை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் பிற மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிக்கும் மாணவர்கள் ரவுடிகள் போல் நடந்து கொள்வதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.