மே தின பேரணி, கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த முடிவாம்

கொழும்பு: பிரமாண்டமாக நடத்த முடிவு... மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழுக்களுக்கு கட்சி தலைமைகள் கட்டளையிட்டுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன கொழும்பை மையப்படுத்தியே மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நிகழ்வுகளும் கொழும்பிலேயே நடைபெறவுள்ளன.