இதற்கு இடையான மெமு விரைவு ரயில் சேவை இன்று ரத்து

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பலர் ரயில் சேவையை நம்பி தினசரி பயணம் செய்கின்றனர். மக்களின் வசதிக்காக அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

இதையடுத்து விடுமுறை நாட்களில் பயணிகளின் தேவைக்கு தகுந்தாற் போல ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில், இன்று எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் ஒலக்கூர் யார்டில் பொறியியல் பணி நடைபெற இருக்கிறது. அதனால் மேல்மருவத்தூர் – விழுப்புரம் இடையே மெமு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்மருவத்தூர் – விழுப்புரத்துக்கு இன்று முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் மற்றும் விழுப்புரம் – மேல்மருவத்தூர் இடையே இன்று மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ஆகிய இரு ரயில்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இத்தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அதற்கு தகுந்தாற் போல திட்டமிட்டுக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.