காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து அணையின் நீர் மட்டம் உயர்ந்து 91.66 அடியாக உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. நேற்று 8 ஆயிரத்து 563 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 630 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 91.52 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 91.66 அடியானது.