கொரோனாவால் பாதித்து எம்ஜிஆரின் அண்ணன் மகன் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (75) இன்று உயிரிழந்தார்.

அண்மையில் கொரோனாவால் எம்.சி.சந்திரன் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.