மலேசியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடில்லி: மலேசியாவுக்கு சுற்றுப்பயணம்... பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலேசியா நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மலேசியா நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவழியினர் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர்

தொடர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சாம்பரி அப்துல் காதிரையும் ராஜ்நாத் சிங் சந்தித்தார்