கனடாவில் கொரோனாவால் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை மொத்தமாக 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இதுவரை வைரஸ் தொற்றினால் 13ஆயிரத்து 109பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 42ஆயிரத்து 069பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 739பேர் பாதிக்கப்பட்டதோடு, 126பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 73ஆயிரத்து 225பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 55ஆயிரத்து 735பேர் பூரண குணமடைந்துள்ளனர்.