இஸ்ரேலில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் மூன்று இலட்சத்து 201பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில் இதுவரை கொவிட்-19 தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்து 127பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மொத்தமாக ஆயிரத்து 701பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 29பேர் உயிரிழந்தனர்.

தற்போதுவரை 40ஆயிரத்து 848பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 742பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 57ஆயிரத்து 226பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.