மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்... கொழும்பில் போராட்டம்

கொழும்பு: இந்தியாவின் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே புதிய ஜனநாயக கட்சி முன்னணி என்ற கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.

பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும். பாகிஸ்தானிய பயங்கரவாதம் தெற்காசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடந்தது.