உளவு அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட வட கொரிய அதிபர்

வடகொரியா: உளவு அமைப்பு அதிகாரிக்கு மரண தண்டனை... வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை இணையதளத்தில் தேடியதாக, உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில், வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் இணையத்தில் தெரிந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவலும் வெளியுலகிற்கு தெரிவதில்லை.

இந்நிலையில், அந்நாட்டின் உளவுத் துறை அதிகாரி ஒ ருவர் கூகுள் இணையதளத்தில் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை தேடி உள்ளார்.

இதனையறிந்த கிம் ஜாங் உன், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுமாறு கூறப்பட்டுள்ளதாக உத்தரவில் வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.