நெதர்லாந்து :நெதர்லாந்து தலைநகர் ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
ஷிபோல் விமான நிலையம் ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். கடந்த மாதம் வரை, விமான நிலையத்திலிருந்து புறப்படும் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 67,500 ஆக இருந்தது. இந்த மாதம் 69,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.