உணவு பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிப்பு

கொழும்பு: எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவினால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்குமாறு உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் 60 வீதமான உணவகங்கள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த இக்கட்டான நேரத்தில் நியாயமான விலையில் உணவக உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.