மதுரையில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 790 ஆக அதிகரிப்பு

மதுரையில் புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 75 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 100 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 710 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பில் யாரும் உயிரிழக்காத நிலையில் நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை 378 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.