மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்... பிரியங்கா உறுதி

சிம்லா: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உறுதி கூறினார்.


இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சோலன் பகுதியில் உள்ள டோடோ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம்.

மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்லை. பெரிய தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.