பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்ப்பு

கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 67). பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவரது மகள் பக்தாவர் பூட்டோ சர்தாரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

சர்தாரியின் நுரையீரல்கள் அருகே நீர் கோர்த்திருக்கிறது. எனவே இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிகிச்சை எடுத்து கொண்டார். கொரோனா பாதிப்புக்கு பின் இந்த உடல்நல குறைவு ஏற்பட்டது.

எனவே அதனாலேயே அவரால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக அந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல கூடிய மகள்களை பெற்றதற்காக அவர் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளார்.
உங்களது அனைத்து செய்திகளுக்கும் மற்றும் வேண்டுதல்களுக்கும் நன்றி என தெரிவித்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.