பட்டீஸ்வரம் கோயிலில் முத்துப் பல்லக்கு திருவிழா

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கில் விசேஷ மலர் அலங்காரத்தில் திருஞானசம்மந்தர் எழுந்தருளினார்.

இவ்வைபவத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று திருஞானசம்மந்தரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் தேதியில் புராண வரலாற்றுப்படி திருஞான சம்பந்தர் தன்னை தரிசிக்க கொடிய வெயிலில் வருவது தேனுபுரீஸ்வரருக்கு பொறுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.